எங்கும் மக்கள் சாலையெலாம்
மக்கள்தான் பிறந்த நாடெலாம் அலைகின்றனர்
தான் குடியில்லையா?
தான் குடியில்லையா எனக் கூக்குரல்…
என் காதுகளில் விழுகிறது
தான் நடந்தசாலையெலாம் போராட்டங்கள்
தமிழ்பால் அன்பு கொண்டோர் எல்லாம் தமிழர்கள் அல்லவா?
இவர்கள் மீதுகுடிமறுப்பு எனும் கயமையை ஏவுவது மிடிமை மட்டுமல்ல மடிமையும் கூட
இதை மறுக்கும் ஒரு வீர ஆட்சியாளன் கூட இல்லையா இத் தமிழ்நாட்டில்?
தமிழர் குடியை ஏத்தும் ஆட்சியாளன் இல்லையா?
இன்று மாசி அம்மாவாசை “புறப்பொருள் வெண்பா மாலை” அய்யனாரின் கோவிலில் இருந்து… வள்ளுவனின் வரிகளில்,
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்தாழாது உஞற்று பவர்க்கு.குறள் 1024
தமிழ்நாட்டில் அய்யனாரும், கருப்பசாமியும் இன்று இருந்தால் அவர்கள் தன் குடிகளை இவ்வாறு தவிக்க விடமாட்டார்கள் என்பது நிதர்சனம்.
என் நினைவுகளில் சல்லிக்கட்டு போராட்ட வாசகங்கள் வருகின்றன… தமிழர் எழுச்சி தொடரில் பதிந்து இருக்கிறேன்…
தமிழரின் எழுச்சி ௨0௧௭
17
கழிவுநீர் மேலாண்மை ..